மல்லிகை மணத்தோடு ரோஜாவின் நிறத்தையும்
அள்ளிக் கலந்தெடுத்து ஆண்டவன் செய்த மலர்!
காலைக் கணவன் கதிர்க்கரத்தால் துயிலெழுப்ப
வெட்கிச் சிவந்துதன் இதழ்விரித்து முறுவலிக்கும் !
தானுளம் விரும்பியே திருமகள் வதிமலர்
ஞானியர் யோகத்தில் நண்ணும் மதிமலர்
வெள்ளம் பெருகி விரைந்தே உயர்ந்தாலும்
துள்ளித் தாமரையும் உயர்ந்து தலைதூக்கும்
வெள்ளம் போல் வேதனைகள் வாழ்க்கையில் மேவினால்
உள்ளத் தாமரை ஊக்கத்தால் உயரட்டும் !
3 comments:
super!!!
Toru Dutt, inspiration ?
kamalam pole ullam uganthen.
Post a Comment