BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Friday, February 10, 2012

THAAMARAI--A POEM BY R.Natarajan

                                              தாமரை .

மல்லிகை மணத்தோடு ரோஜாவின் நிறத்தையும் 

அள்ளிக் கலந்தெடுத்து ஆண்டவன் செய்த மலர்! 


காலைக் கணவன் கதிர்க்கரத்தால் துயிலெழுப்ப 

வெட்கிச் சிவந்துதன் இதழ்விரித்து முறுவலிக்கும் !


தானுளம் விரும்பியே திருமகள் வதிமலர் 

ஞானியர் யோகத்தில் நண்ணும் மதிமலர் 


வெள்ளம் பெருகி விரைந்தே உயர்ந்தாலும் 

துள்ளித் தாமரையும் உயர்ந்து தலைதூக்கும் 


வெள்ளம் போல் வேதனைகள் வாழ்க்கையில் மேவினால் 

உள்ளத் தாமரை ஊக்கத்தால்  உயரட்டும் !


3 comments:

GAYATHRI said...

super!!!

IvanHoe said...

Toru Dutt, inspiration ?

k.indira said...

kamalam pole ullam uganthen.