BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, March 2, 2011

verses on lord Shiva-in Tamil

                              கழலிணையைத் தொழுதுய்வோம் !


நில்லாது பொருளனைத்தும் , நிலையாது சுகமனைத்தும் .
எல்லாமும் எனதென்றே இருப்பதுவும் தவறன்றோ 
பொல்லாத உளமேஇப் புவிவாழ்க்கை முடியுமுன்னே 
கல்லாலின் கீழமர்ந்தான் கழலிணையைத் தொழுதுய்வாய் !


உய்யுமொரு வழிதேடி உளைகின்ற உளத்தவரே 
வெய்யதாக வரும்பிறவி வெள்ளத்தைக் கடந்திடவே 
செய்யுமொரு புணையுண்டு--தெளிந்திடுவீர் புணையதுதான் 
ஐயனவன் கல்லாலின் அடியமர்ந்தான் அடியிணையே !


அடியேனுன் அருள்விரும்பி அன்புடனே அழைக்கின்றேன் 
துடியேயாம் இடைஉமையின் துணைவாநீ துயர்துடைப்பாய்
முடியேறிப் புனல்மங்கை மொய்க்கின்ற பெருமானே 
முடிவேதும் இல்லாத முழுஞானச் சுடரொளியே !