BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, April 8, 2012

KUTRAALA ARUVI---A Poem by R.Natarajan


குற்றால அருவி !


வற்றாத குளுமைக்கு மறுபெயர் உண்டெனில்
அதுதான் --குற்றால அருவி !
வானத்தில் இருந்து வழிகின்ற 
வைரத் தண்ணீர் !
தாவி வருகின்ற 
தரளமணிக் குவியல் !
குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும்--வாரிவாரி
நீர்க்கரத்தால் வழங்கும்
நெடும்புகழ் வள்ளல் !
தெம்மாங்குப் பாடலினைத்
திரிகூட மலையில்
தேனாக இசைக்கின்ற
தெய்விகப் பேரழகி !!!
           

விண்ணை இடிக்கின்ற 
வெற்பரசன் திறல்போற்றி
வானவர்கள் பரிசளித்த
வைரமணி வடிவாள் !
நித்திலப் பெருங்கூட்டம்
நீராக மாறி
நேராக வீழ்கின்ற 
நிகரில்லா விந்தை !
செந்தமிழ் மொழியினிமை
தண்மையையும் தான்சேர்த்து
வந்த வடிவம்
வற்றாத குற்றாலம் !!!