BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Thursday, February 21, 2013

Chemmmozhiye--Verses on Tamil by R.Natarajan

                                                                     

                       செம்மொழியே !

(  இன்று  சர்வதேச தாய்மொழிகள் தினம் .இந்நாளில் , என் 15 வது வயதில் நான் எழுதிய இரண்டு வெண்பாக்களை நம் அன்னைத் தமிழுக்குக் காணிக்கையாக்குகின்றேன் )


செம்மொழியே ! சீர்மிக்க தேன்மொழியே ! உன்புகழை 
எம்மொ ழியிலே எடுத்துரைப்பேன் ! -- அம்மொழியே !
நாங்களுனை நாற்றிசையும் நாட்டம் மிகக்கொண்டே 
ஓங்கவைப் போமே உழைத்து !


வளரும் அறிவியல்நம் வண்டமிழ் தன்னில்  
தளிரட்டும் நன்கு தமிழா ---மிளிரட்டும் 
எல்லாக் கலைகளும் இன்றமிழ் நாட்டிலே !
நல்லா  ருடனிதை நீ  நாடு !