BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Thursday, February 9, 2012

NADAIPAATHAI VAAZHKKAI-A POEM BY R.Natarajan

                                         நடைபாதை வாழ்க்கை 


ஏழ்மையில் இருக்கும்' செல்வ விநாயகர் ',
அரசியல் காற்று அடிக்கும் திக்கில் 
பறக்கும் கட்சிக் கொடிகள் ,
உருவம் பார்க்க உடைந்த கண்ணாடி ,
ஓலைப் பாய்கள் ,ஓட்டைப் பானைகள் ,
தலைமுறைத் தேவையைத் தனக்குள் அடக்கும் 
தகரப் பெட்டி .

வாகன ஒலிகளின் தாலாட்டில் மயங்கி 
அன்னை மடியில் ஆனந்தமாய்த் தூங்கும் 
அழுக்குக் குழந்தை --ஆனால் 
அழகுக் குழந்தை .

காவல் நாயுண்டு ---கட்டிக் 
காப்பதற்குத் தான் பொருள் இல்லை ...
சமையில் முதல் மையல் வரை
சகலமும் இங்கேதான் .
--இதுவே இவர்கள் வாழ்க்கைப் பாதை --
நமக்கோ நடைபாதை! 

-வறுமையில் பிறந்ததால் --அதுவே
பிறப்புரிமையாய் ஆன போதும் 
பாதையை ஒட்டிய சுவர் வாசகம் ,
' வளமான சமுதாயம் காண 
வாரீர், வாரீர்' என்று வாய்கிழிய 
வரவேற்கும் ! 

0 comments: