நடைபாதை வாழ்க்கை
ஏழ்மையில் இருக்கும்' செல்வ விநாயகர் ',
அரசியல் காற்று அடிக்கும் திக்கில்
பறக்கும் கட்சிக் கொடிகள் ,
உருவம் பார்க்க உடைந்த கண்ணாடி ,
ஓலைப் பாய்கள் ,ஓட்டைப் பானைகள் ,
தலைமுறைத் தேவையைத் தனக்குள் அடக்கும்
தகரப் பெட்டி .
வாகன ஒலிகளின் தாலாட்டில் மயங்கி
அன்னை மடியில் ஆனந்தமாய்த் தூங்கும்
அழுக்குக் குழந்தை --ஆனால்
அழகுக் குழந்தை .
காவல் நாயுண்டு ---கட்டிக்
காப்பதற்குத் தான் பொருள் இல்லை ...
சமையில் முதல் மையல் வரை
சகலமும் இங்கேதான் .
--இதுவே இவர்கள் வாழ்க்கைப் பாதை --
நமக்கோ நடைபாதை!
-வறுமையில் பிறந்ததால் --அதுவே
பிறப்புரிமையாய் ஆன போதும்
பாதையை ஒட்டிய சுவர் வாசகம் ,
' வளமான சமுதாயம் காண
வாரீர், வாரீர்' என்று வாய்கிழிய
வரவேற்கும் !
0 comments:
Post a Comment