BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, February 26, 2012

LULLABY- A POEM BY R.Natarajan

                                       LULLABY
           For you,my dear,this lullaby I sing;
           Sweet slumber my soft music shall bring !
           Close your eyes to this mundane world-
           A realm of fantasy you'll behold!

                        Oh sleep! let your gentle arms embrace
                        This little flower of our garden with grace! 


          Heavenly music can't match your voice;
          To watch you toddle around is the greatest of joys!
          It is a delight to see you eat
          With food strewn over your dresses neat.

                      Oh sleep ! let your gentle arms embrace
                      This little flower of our garden with grace!


         Can ever worry steal away your mirth ,
         Making you miserable on this very earth ?
         Can anxious thoughts about  future life
         Hang above you like a Damocle's knife?

                      Oh sleep ! let your gentle arms embrace
                      This little flower of our garden with grace !


          Your wants are simple ,needs are few;
          You cry only when the milk is due.
          A broken toy can give you pleasure
          More than any other earthly treasure.

                     Oh sleep! let your gentle arms embrace
                     This little flower of our garden with grace !


          Sleep on little one ,this is the time !
          When age advances you'll reach your prime.
          Duties will increase and worries will creep--
          Even cosy beds can't make you sleep.

                    Oh sleep ! let your gentle arms embrace
                    This little flower of our garden with grace !!!

                 
   



Thursday, February 23, 2012

"Vetkai Muthirntha maname"--Sai Bhajan By R.Natarajan

                                                                                                                         
                                             "   வேட்கை முதிர்ந்த மனமே "




("பிரேம முதித" என்ற பஜனைப் பாடலைத் தமிழில் தர முயன்றுள்ளேன் .சாயி அன்பர்கள் பாடி மகிழ்வார்களாக !)

வேட்கை முதிர்ந்த மனமே சொல்லு ராம ராம ராம் ,
 ராம ராம ராம் ,
 ராம ராம ராம்,சாயி ராம ராம ராம்

பாவங்களைத் துன்பங்களைப் போக்கும் சாயி ராம்

துயர்கடலைக் கடக்கும் நல்ல தோணி சாயி ராம்
                                                                                                             (ராம ராம )
மிகுந்த இன்பம் அமைதி நல்கும் ஞானி சாயி ராம்

தகுந்த துணை அற்றவர்க்குப் பற்றுக் கோடவன்
                                                                                                             (ராம ராம )
மறைபொருளாம் தூய மந்திரம் சாயி ராம ராம ராம்

நிறை அமைதி உளத்தில் உளன் சாயி ராமனே
                                                                                                             (ராம ராம )
அன்னை தந்தை சுற்றம் நட்பு யாவும் சாயி ராம்
                                                                                                                     
பொன்னும் பொருளும் நமக்குப்  புவியில் சாயி நாமமே
                                                                                                                (ராம ராம )




                                                                                                                           

Sunday, February 19, 2012

SIVA THAANDAVAM- A poem on Lord Siva's cosmic dance By R.Natarajan

                                     மூண்டெழுந்த தாண்டவம் !

கீண்டநிலாத் துண்டாடப் புனல்கங்கை விரைந்தாடக்
         
             கிளர்மாலை வண்டாடச் சீர்தாளம் துடிபோட,

நீண்டசடை சுழன்றாட, நெளியரவம் வளைந்தாட,

             நெருப்பாடப் பொருப்பாடக் கழல்கடகம் நெகிழ்ந்தாட ,

மூண்டெழுந்த தாண்டவத்தால் மூவுலகும் திண்டாட ,

              முற்றுமறி ஞானியர்கள் பரவசத்தால் பண்பாட,

ஈண்டுனது திருநடனம் இருகண்கள் கண்டபின்னர்

         இன்னுமொரு முறைபிறக்க வேண்டுமோ நான்
                                                                                 ஆண்டவனே !!!       

Friday, February 17, 2012

SANGATH THAMIZHANAITHUM THAA-(VENPAAKKAL)-By R.Natarajan

                                     சங்கத் தமிழனைத்தும் தா !


பாடுபொருள் எத்தனையோ ! பாடியவர் எத்தனையோ !
தேடுகின்ற எல்லாம் தெளிவாக்கும் -- நீடுலகில்
தங்கப் புதையலும் தான்வேண்டேன் ,தாயேயுன்
சங்கத் தமிழனைத்தும் தா !


தேன்வேண்டேன், பால்வேண்டேன் ,தித்திக்கும் முக்கனியும்
நான்வேண்டேன், இன்பம் நனிவேண்டேன்--"யான்வாழ்நாள்
இங்குலகில் பண்ணனுக்கே " என்ற வளவன்வாழ்
சங்கத் தமிழனைத்தும் தா!


ஈந்தான் தலையொருவன் ; ஈடில் புலவனுக்கு
வேந்தனே வெண்கவரி வீசினான் -- சாய்ந்தமுல்லை
தங்கிடத் தேர்தந்தான் தார்வள்ளல் , ஈங்கிவர்வாழ்
சங்கத் தமிழனைத்தும் தா !


காலக் கருவூலம் ,காவியப் பூஞ்சோலை ,
ஞாலம் அளந்திடும் நற்பனுவல் --சாலமிகப்
பொங்கும் சுவையமுதம் ,பொன்றாத வாழ்வியலாம்
சங்கத் தமிழனைத்தும் தா !


முத்தும் முழுமணியும் மொய்புகழ் ஆடகமும்
அத்தனைச் செல்வம் அவையாவும் -- மெத்தவே
எங்கள் இலக்கியத்திற் கீடாமோ ? ஆதலினால்
சங்கத் தமிழனைத்தும் தா !


கனலும் கறையானும் காலமாம் வெள்ளப்
புனலும் அழித்தவை போதும் !--இனிநாங்கள்
இங்கிணைந்து செம்மொழியே ! எம்முயிராய்க்  காத்திடவே
சங்கத் தமிழனைத்தும் தா !!!



(உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கவிதைப் போட்டிக்கு அனுப்பிய வெண்பாக்கள் )


குறிப்பு : கவிதைப் போட்டியின் தலைப்பு ---"சங்கத் தமிழனைத்தும் தா"















Wednesday, February 15, 2012

NOYILIRUNDHU VIDUTHALAI-A Poem by R.Natarajan

நோயிலிருந்து விடுதலை

     
'அருந்தியது அற்றபின்தான்
அடுத்தபிடி ' என்ற
அய்யன் சொற்படி உண்பதே
ஆரோக்கிய வாழ்வின்
முதற்படி !

உண்பதற்கும் உரைப்பதற்கும்
உள்ளது ஒரு வாயே !
பாதியாய் இரண்டினையும்
பகுத்திட்டால் வருமோ
நோயே !

உப்புக் கடலாய் உடலை மாற்றினால்
குப்பெனக் குருதி கொதித்துப் பொங்கிடும் !
பகையும் ஒருநாள் பாசமாய் மாறும்
புகையால் என்றுமே மரணம்தான் நேரும் !


கடலில் மூழ்கி மடிந்தவரை விடக்
குடியில் மூழ்கி முடிந்தவர் மிகப்பலர் !
நடந்து சென்றால் ,நோயைக்
கடந்து செல்லலாம் !

உடம்பை வளர்த்தால்
உயிரும் வளரும் '---இதுதான்
திருமந்திரம் திருத்தமாய் மொழியும்
மூலமந்திரம் !

குழந்தையைப் போல் உடலையும்
குறை அணுகாமல் வளர்த்திடல் வேண்டும்
என்பதே இந்த மந்திரம்
இயம்பும் தந்திரம் !

சரியான உணவு
முறையான பயிற்சி
ஒழுங்கான வாழ்க்கை ---இவற்றால்
உடல்நலம்,மனவளம் பேணலாம் !
நோயிலிருந்து விடுதலை
காணலாம் !

இறுதியில் ஓர் உறுதிமொழி :
வருமுன் காப்போம் !
வந்துவிட்டால் .......? தகுந்த
மருத்தவரைப்
பார்ப்போம் !!!

(சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசுப் பொது மருத்துவமனை நடத்திய ௨௦௧௦ -2010 சுதந்திர தின விழாக் கவிதைப் போட்டியில் விருது பெற்ற கவிதை )      

Monday, February 13, 2012

KURUNTOKAI SONG-Translated from Tamil by R.Natarajan

                                        INSTANTANEOUS EMBRACE


Did our mothers know each other?
Was my father in anyway related to yours?
How come we got united together?
Like the rain on red earth's surface
Loving hearts got blended
In an
Instantaneous embrace.
                                                 Translated from Tamil by R.Natarajan


(The above poem is from the ancient Tamil classic Kuruntokai,of the Sangam Era about 2000 years ago)
This translation was awarded consolation prize in the Indian Literature(Sahitya Akademy's journal) Golden Jubilee Translation Competition

ILLUSIONS-A POEM BY R.Natarajan

                                     ILLUSIONS

       Strands of peacock feathers
       secretly kept
       inside my
       school note-book
       never multiplied.

                     The flirtatious glances
                     of my
                     college girlfriend
                     failed to
                     materialize into
                     matrimony.

     The accounting skills
     acquired by studiousness
     and perfected by my
     post graduate degree
     did not in anyway
     prevent the
     dissipation of all my
     properties.

                  Now,
                  reduced to
                  medicines,injections and
                  bedpan, when I am
                  waiting for the "final call'
                  wallowing in
                  worldly grief-
                  He in His own
                  whimsical way
                  is not
                  willing to oblige.  

     


Sunday, February 12, 2012

MALAIMAAMAGALIN -- A KIRTANAI( musical composition) By R.Natarajan

               '  மலைமாமகளின் '--கீர்த்தனை.                                ராகம் : பங்களா 

( தியாகராஜ சுவாமிகளின் '' கிரிராஜ சுதா தனய"என்ற கீர்த்தனையை அடியொற்றி எழுதப் பட்டது . தியாகராஜர் திருவருள் துணை புரியட்டும் )

                                                              பல்லவி 

                 மலைமாமகளின் மகனே குகனே 
                                                                                                                         (மலை)
                                                               அனுபல்லவி 

                 குறமாது மணாளனே மால்மருக 
                 நிறமாமயில் மேலமர் வேல்முருக 
                                                                                                                          (மலை)
                                                                 சரணம் 
  
                 வினையேதும் வராமலே செய்திடு 
                 குறை மேவிடுதே அதையேதடு 
                 பணிவோமுனைத்தமிழ் தந்தவனே 
                உனைப் பாடிடுவேன் நீ தேடிவாஎனை  
                                                                                                                         (மலை )                                      
                             

Friday, February 10, 2012

THAAMARAI--A POEM BY R.Natarajan

                                              தாமரை .

மல்லிகை மணத்தோடு ரோஜாவின் நிறத்தையும் 

அள்ளிக் கலந்தெடுத்து ஆண்டவன் செய்த மலர்! 


காலைக் கணவன் கதிர்க்கரத்தால் துயிலெழுப்ப 

வெட்கிச் சிவந்துதன் இதழ்விரித்து முறுவலிக்கும் !


தானுளம் விரும்பியே திருமகள் வதிமலர் 

ஞானியர் யோகத்தில் நண்ணும் மதிமலர் 


வெள்ளம் பெருகி விரைந்தே உயர்ந்தாலும் 

துள்ளித் தாமரையும் உயர்ந்து தலைதூக்கும் 


வெள்ளம் போல் வேதனைகள் வாழ்க்கையில் மேவினால் 

உள்ளத் தாமரை ஊக்கத்தால்  உயரட்டும் !


Malai-A poem by R Natarajan

                                                      மலை !

நதிகளின் பிறப்பிடம்
 .
முகில்களின் இருப்பிடம் .

அடியைப் பூமியில் ஆழமாய்ப் பதித்து

முடியால் விண்ணை எம்பித்  தொடுதல் 

மனித இனத்துக்கு மலை கூறும் 

விடா முயற்சியின் விளக்க உரை.

மலைச்சிகரம் ஏறுதல் போற்றுதற்குரியது 

மனச்சிகரம் ஏறுதல் 

போற்றி வணங்கத் தக்கது !

Thursday, February 9, 2012

NADAIPAATHAI VAAZHKKAI-A POEM BY R.Natarajan

                                         நடைபாதை வாழ்க்கை 


ஏழ்மையில் இருக்கும்' செல்வ விநாயகர் ',
அரசியல் காற்று அடிக்கும் திக்கில் 
பறக்கும் கட்சிக் கொடிகள் ,
உருவம் பார்க்க உடைந்த கண்ணாடி ,
ஓலைப் பாய்கள் ,ஓட்டைப் பானைகள் ,
தலைமுறைத் தேவையைத் தனக்குள் அடக்கும் 
தகரப் பெட்டி .

வாகன ஒலிகளின் தாலாட்டில் மயங்கி 
அன்னை மடியில் ஆனந்தமாய்த் தூங்கும் 
அழுக்குக் குழந்தை --ஆனால் 
அழகுக் குழந்தை .

காவல் நாயுண்டு ---கட்டிக் 
காப்பதற்குத் தான் பொருள் இல்லை ...
சமையில் முதல் மையல் வரை
சகலமும் இங்கேதான் .
--இதுவே இவர்கள் வாழ்க்கைப் பாதை --
நமக்கோ நடைபாதை! 

-வறுமையில் பிறந்ததால் --அதுவே
பிறப்புரிமையாய் ஆன போதும் 
பாதையை ஒட்டிய சுவர் வாசகம் ,
' வளமான சமுதாயம் காண 
வாரீர், வாரீர்' என்று வாய்கிழிய 
வரவேற்கும் !