BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, February 15, 2012

NOYILIRUNDHU VIDUTHALAI-A Poem by R.Natarajan

நோயிலிருந்து விடுதலை

     
'அருந்தியது அற்றபின்தான்
அடுத்தபிடி ' என்ற
அய்யன் சொற்படி உண்பதே
ஆரோக்கிய வாழ்வின்
முதற்படி !

உண்பதற்கும் உரைப்பதற்கும்
உள்ளது ஒரு வாயே !
பாதியாய் இரண்டினையும்
பகுத்திட்டால் வருமோ
நோயே !

உப்புக் கடலாய் உடலை மாற்றினால்
குப்பெனக் குருதி கொதித்துப் பொங்கிடும் !
பகையும் ஒருநாள் பாசமாய் மாறும்
புகையால் என்றுமே மரணம்தான் நேரும் !


கடலில் மூழ்கி மடிந்தவரை விடக்
குடியில் மூழ்கி முடிந்தவர் மிகப்பலர் !
நடந்து சென்றால் ,நோயைக்
கடந்து செல்லலாம் !

உடம்பை வளர்த்தால்
உயிரும் வளரும் '---இதுதான்
திருமந்திரம் திருத்தமாய் மொழியும்
மூலமந்திரம் !

குழந்தையைப் போல் உடலையும்
குறை அணுகாமல் வளர்த்திடல் வேண்டும்
என்பதே இந்த மந்திரம்
இயம்பும் தந்திரம் !

சரியான உணவு
முறையான பயிற்சி
ஒழுங்கான வாழ்க்கை ---இவற்றால்
உடல்நலம்,மனவளம் பேணலாம் !
நோயிலிருந்து விடுதலை
காணலாம் !

இறுதியில் ஓர் உறுதிமொழி :
வருமுன் காப்போம் !
வந்துவிட்டால் .......? தகுந்த
மருத்தவரைப்
பார்ப்போம் !!!

(சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசுப் பொது மருத்துவமனை நடத்திய ௨௦௧௦ -2010 சுதந்திர தின விழாக் கவிதைப் போட்டியில் விருது பெற்ற கவிதை )      

0 comments: