நோயிலிருந்து விடுதலை
'அருந்தியது அற்றபின்தான்
அடுத்தபிடி ' என்ற
அய்யன் சொற்படி உண்பதே
ஆரோக்கிய வாழ்வின்
முதற்படி !
உண்பதற்கும் உரைப்பதற்கும்
உள்ளது ஒரு வாயே !
பாதியாய் இரண்டினையும்
பகுத்திட்டால் வருமோ
நோயே !
உப்புக் கடலாய் உடலை மாற்றினால்
குப்பெனக் குருதி கொதித்துப் பொங்கிடும் !
பகையும் ஒருநாள் பாசமாய் மாறும்
புகையால் என்றுமே மரணம்தான் நேரும் !
கடலில் மூழ்கி மடிந்தவரை விடக்
குடியில் மூழ்கி முடிந்தவர் மிகப்பலர் !
நடந்து சென்றால் ,நோயைக்
கடந்து செல்லலாம் !
உடம்பை வளர்த்தால்
உயிரும் வளரும் '---இதுதான்
திருமந்திரம் திருத்தமாய் மொழியும்
மூலமந்திரம் !
குழந்தையைப் போல் உடலையும்
குறை அணுகாமல் வளர்த்திடல் வேண்டும்
என்பதே இந்த மந்திரம்
இயம்பும் தந்திரம் !
சரியான உணவு
முறையான பயிற்சி
ஒழுங்கான வாழ்க்கை ---இவற்றால்
உடல்நலம்,மனவளம் பேணலாம் !
நோயிலிருந்து விடுதலை
காணலாம் !
இறுதியில் ஓர் உறுதிமொழி :
வருமுன் காப்போம் !
வந்துவிட்டால் .......? தகுந்த
மருத்தவரைப்
பார்ப்போம் !!!
(சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசுப் பொது மருத்துவமனை நடத்திய ௨௦௧௦ -2010 சுதந்திர தின விழாக் கவிதைப் போட்டியில் விருது பெற்ற கவிதை )
'அருந்தியது அற்றபின்தான்
அடுத்தபிடி ' என்ற
அய்யன் சொற்படி உண்பதே
ஆரோக்கிய வாழ்வின்
முதற்படி !
உண்பதற்கும் உரைப்பதற்கும்
உள்ளது ஒரு வாயே !
பாதியாய் இரண்டினையும்
பகுத்திட்டால் வருமோ
நோயே !
உப்புக் கடலாய் உடலை மாற்றினால்
குப்பெனக் குருதி கொதித்துப் பொங்கிடும் !
பகையும் ஒருநாள் பாசமாய் மாறும்
புகையால் என்றுமே மரணம்தான் நேரும் !
கடலில் மூழ்கி மடிந்தவரை விடக்
குடியில் மூழ்கி முடிந்தவர் மிகப்பலர் !
நடந்து சென்றால் ,நோயைக்
கடந்து செல்லலாம் !
உடம்பை வளர்த்தால்
உயிரும் வளரும் '---இதுதான்
திருமந்திரம் திருத்தமாய் மொழியும்
மூலமந்திரம் !
குழந்தையைப் போல் உடலையும்
குறை அணுகாமல் வளர்த்திடல் வேண்டும்
என்பதே இந்த மந்திரம்
இயம்பும் தந்திரம் !
சரியான உணவு
முறையான பயிற்சி
ஒழுங்கான வாழ்க்கை ---இவற்றால்
உடல்நலம்,மனவளம் பேணலாம் !
நோயிலிருந்து விடுதலை
காணலாம் !
இறுதியில் ஓர் உறுதிமொழி :
வருமுன் காப்போம் !
வந்துவிட்டால் .......? தகுந்த
மருத்தவரைப்
பார்ப்போம் !!!
(சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசுப் பொது மருத்துவமனை நடத்திய ௨௦௧௦ -2010 சுதந்திர தின விழாக் கவிதைப் போட்டியில் விருது பெற்ற கவிதை )
0 comments:
Post a Comment