BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, October 24, 2012

UYARNILAI KOODUVOM-A song on Goddess MAHALAKSHMI -By.R.Natarajan

                               

                                                      உயர்நிலை கூடுவோம் 

பொலம்புனை நலம்திகழ் வலம்படு திருமகள் 
        புவியினில் பொருளொடு புகழையும் தருமகள் 
இலம்இலம் எனுமொழி இவள்வரின்  இல்லையே 
        எவைஎவை நல்லவை அவைவரும் ஒல்லையே 


குறுமுகை நகையவள் முகம்தனில்  மின்னுமே 
        குணம் மிகும்,திறம் வரும்,மகிழ்ச்சியும் நண்ணுமே 
அறுசுவை உணவுடன் அணிமணி யாவையும் 
        அளித்திடும் அலைமகள் கடைக்கணின் பார்வையே 


எண்வகை ஆயின செல்வமும்  குவிந்திடும் 
        ஏழ்மையும்,துன்பமும் ,கவலையும் அவிந்திடும் 
பண்வகை நல்லிசைப் பாடலைப்  பாடுவோம் 
        பண்புடன்,பணிவுடன் உயர்நிலை கூடுவோம் 
      
              



                                                            

0 comments: