சீயப்பெருமான்
பொங்கும் சினத்தால் உடல்நடுங்கப்
பொல்லா அரக்கன் பிள்ளையிடம்
எங்கே உள்ளான் உன்னிறைவன்
எதிரில் வரச்சொல் எனவுரைக்க
அங்கே நின்ற நெடுந்தூணில்
ஆர்த்து தித்துக் குடல்கிழித்த
செங்கண் சீயப் பெருமானைச்
சிந்தை வைத்து நலம்பெறுவோம் !
1 comments:
Short & Sweet
RMK
Post a Comment