BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, December 16, 2012

KAALAI-a poem welcoming Maargazhi's mystic morning by R.Natarajan

            

                               காலை 

கங்குலெனும் மாற்றரசன் கடும்போர் செய்து 
        களைத்தபின்னர் ஆற்றாது வெள்கி ஓடச் 
செங்கதிராம் படைகொண்டு வெய்யோன் வென்ற 
        செய்தியினைச் செங்கொண்டைச் சேவல் கூவும் 
பொங்கரினில் போதவிழும் புதும ணத்தைப்
        பொற்புடனே இளந்தென்றல் சுமந்து வீசும் 
தங்கமெனக் கீழ்வானம் பொலிவு கொள்ளத் 
        தமிழ்ப்புலவோர் வாழ்த்துரைக்கும் காலைப் போது 


கீழ்வானம் வெளுப்படைய மாம ரத்துக்
        கிளையினிலே கருங்குயில்கள் கூடிக் கூவ ,
தாழ்வாரம் தனில்சிட்டுக் குருவி மேய ,
       தையலர்கள் வாயிலிலே கோலம் போட ,
யாழ்வாணர் இசையோடு தமிழும் சேர்த்தே 
        எவ்வுயிரும் மயங்கிடவே உருகிப் பாட ,
வாழ்வாங்கு வாழ்கவெனப் புலவோர் கூறும் 
        வாழ்த்தொலிகள் பரவுகின்ற காலைப் போது 
   
        

0 comments: