முடிவில் முக்தி கொடு !
உன்
மந்திர வேய்ங்குழலின்
மனத்துக்கினிய மயக்கும் இசை
கால எல்லைகளைக் கடந்து
ஊழிதோறும் -
உடைந்து ,உருக்குலைந்து போகும்
உள்ளங்களுக்கு
உணர்வும் ,உவகையும்
ஊட்டுகின்றது
எழில் உறை யமுனைத் துறையில்
இயல்பாய் நீ இயற்றிய
சிலிர்க்கச் செய்யும் சிறுகுறும்புகள்
தெய்விகத் தேனில் தோய்த்தெடுத்த
தூய திருக்கதைகளாய்த்
திகட்டாமல் திகழ்ந்து
வழிவழியாய் வழங்கி
வருகின்றன
சிலம்புகள் ஒலி கொஞ்ச ,
சிறு கை வளை ஒளி மிஞ்ச --உன்
பிஞ்சுக் கால்கள் பின்ன --நீ
களிநடம் புரிகையில் -- சிறிதே
சிந்தும் துகள்கள்
தொடர்ந்தே வந்து தொல்லை தரும்
பிறப்பையும் இறப்பையும்
தொலைந்தே போகச் செய்யும்
பால்வடியும் உன்
பாங்கான முகத்தில்
பரவி மிளிரும்
விளையாட்டுப் புன்னகை --எங்கள்
வினைகள் அனைத்தையும்
விடாமல் விழுங்கி
விடும்
நீ
எளிய இடைமகனாகவும்
இருக்கின்றாய்
எல்லாம் வல்ல இறைவன்
எடுத்த அவதாரமுமாய்
இலங்குகின்றாய்
நீ
உரைத்த கீதை
உலகியல் , உளவியல் வழிகாட்டியாகவும்
உயர்ந்த ,உன்னத ஆன்ம ஞானத்தின்
உச்சியாகவும் ஒருசேர
உள்ளது
செப்பரிய அன்பாலும் ,
செயல்மறந்த பக்தியாலும் ,
உருகிய வெண் ணய் போல் ஆன-எங்கள்
உள்ளங்களை உடனே
கவர்ந்து விடு --கண்ணா !
அல்லல்படும் ஆன்மாக்களை
. முழுதும் முகிழச் செய்து
முடிவில் முக்தி
கொடு !!!
2 comments:
Romba nalla irukku sir.....Unamai thaan Kannan endraale nammaiyum ariyaamal nam manam urugithaan pogiradhu.........
Feel like going to Guruvayoor immediately and worship the most beautiful Cute and Kutty Kannan.......!!!!
Romba nalla irukku sir.....Unamai thaan Kannan endraale nammaiyum ariyaamal nam manam urugithaan pogiradhu.........
Feel like going to Guruvayoor immediately and worship the most beautiful Cute and Kutty Kannan.......!!!!
Dhanusha
Post a Comment