BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, March 11, 2012

NILAVU--A Poem by R.Natarajan

நிலவு

அல்லிமலர் இதழ்விரிக்கக் காட்டுப் பூவை
அளாவிவரும் இளந்தென்றல் வீசும் நேரம் .
எல்லையில்லா வான்கடலில் அமுதம் என்றே
எழுலுடனே காட்சிதரும் நிலவுப் பெண்ணே !
முல்லையென உடுக்கூட்டம் முழுதும் தோன்ற
மோகனமாய் விளங்குகின்றாய் இணையே இன்றி .
சொல்லையெலாம் கடந்துநிற்கும் பெருவ னப்பே
சுந்தரமே குளிர்நிலவே! ஒளிவி ளக்கே!




தண்ணிலவின் நல்லொளியில் இந்த ஞாலம்
தகவுடனே கொண்டதெழில் மிகுந்த கோலம் .
மண்ணுலகில் ஒளிமழையை மதிபெ ருக்கும்
மனங்களிலே உவகையெனும் பயிர்செ ழிக்கும்
வண்ண மிகு நிலவொளியில் முற்றம் சேர்ந்து
மாந்தரெலாம் யாழ்கொண்டே இனிய பண்ணில்
எண்ணமதைப் பாட்டாக்கிப் பாடும் வேளை
இவ்வுலகில் மறைந்திடுமே துன்பப் பாலை !

             

        

0 comments: