BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, December 4, 2013

"கொடுப்பதே மகிழ்ச்சி "--A poem by R.Natarajan




               "   கொடுப்பதே மகிழ்ச்சி " 


'கொடுப்பதில் மகிழ்வடையும் வாரம்'  பள்ளிகளில் கொண்டாடப் பட வேண்டும் என்ற பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவு பற்றிய செய்தி (தினமணி -29 செப் ) மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது .

குறுகிய நோக்கமும் ,தன்னலப் போக்கும் ,அனைத்தையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையும் பெருகியுள்ள இந்நாளில் இப்படிப்பட்ட ஒரு புதிய அணுகுமுறை பற்றிப் படித்த உடனே உள்ளம் துள்ளிக் களித்தது . அந்தக் களிப்பிலே கனிந்த ஒரு கவிதையைப்  பகிர்ந்து கொள்ள விழைகின்றேன் :


ஆறளிக்கும் தண்புனலை  ; விண்ணில் தோன்றும் 
         ஆதவனும் ஒளியோடு தருவான் வெப்பம் .
சேறளிக்கும் தாமரைப்பூ ;  மரங்கள் யாவும் 
         தித்திக்கும்  கனிதந்து நிழல் கொடுக்கும் 
மாறிலாது  மழையளிக்கும் முகிலின் கூட்டம் ;
          வள்ளல்பசு பால்சுரக்கும் . இயற்கை அன்னை 
ஈறிலாது வழங்குகின்ற கொடையே வாழ்க்கை !
          ஈத்துவக்கும் இன்பத்தைப் பெறுவோம் நாமும் !

0 comments: