மழை
அள்ளிக் கொடுத்திட
வள்ளல் மழைக்கு
வெள்ளிக் கரங்கள்
ஆயிரம் ,ஆயிரம் !
நீரை முகந்து, மேகம் என்னும்
பெட்டகத்தில் சேமித்து வைத்து ,
உரிய பருவம் வந்த உடனே
வட்டியுடன் வழங்கிடும்
வானத்து வங்கி !
இடியின் கட்டியம் எங்கும் ஒலிக்க
மின்னல் வெளிச்சம் போட்டுக் காட்ட
உல்லாசமாய் உலாவரும்
மேல்நாட்டு ராணி !
2 comments:
idhu ena meter la ezhudhirka? poem super aana rythm purila...
SUPERB SIR
Post a Comment