BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, July 29, 2012

A FOLK SONG--by R.Natarajan(AADI special)

                      நாட்டுப் புறப் பாடல் (ஆடித்  திங்கள் சிறப்புப் பாடல் )



பூவோட  மாலையும்  கொண்டாந்து நீ  போடு

பாவோட ராகமும் ஒண்ணாகவே   பாடு

வேப்ப எல  தோரணத்த வீதியில கட்டு

வேகமுடன் தாளத்த உடுக்கையில தட்டு

பொன்னாத்தா  பூசையில  பொங்கலிடு  வோமே

எந்நாளும்  காப்பவ கண்ணாத்தா  தானே                  1




கலையாத கருமேகம்  சடையாடும்  அம்மாவே 
                                                   ஒன்னோட பேரச்  சொன்னா
நெலையான  பெரும்பேரும்  நெறைவான  திருவாழ்வும்    
                                                   தன்னாலே வருமே சும்மா
கருநாகம்   குடை  தந்திடும்
திரிசூலம்  ஒளி   சிந்திடும்
ஆயிரம்  பேர் கொண்டவ ---அவ
ஆயிரம்  ஊர்   நின்றவ  - அவ                                                        2
ஆயிரம்  போர்  வென்றவ



பொல்லாத   நோவும்  இல்லாமப் போகும்  மாரியம்மா --உன்

கண் பார்வ  போதுமடி  மாரியம்மா

வின  சொல்லாம  ஒடிவிடும்

மனப்  பொல்லாங்கு  மாறிவிடும் --எங்க

வெள்ளாம   பெருகிவிடும் --இனி

எல்லாமே   நீதானே --அம்மா

எல்லாமே   நீதானே                                                          3   

    

 
                                                           



3 comments:

RMK said...

A Good Effort and Beginning.
Cholazhagu,Porulazhagu erandum
kondu,Sernthu pinnappatta Azhagiya
Paamaalai.

Vaazhththukkal.

RMK

lalitha natarajan said...

a very apt kavithai for adimatham

GAYATHRI said...

aadi special...brings back my ssm-dhs memories:)