ஏழிசை யாழினை ஏந்திய பாமகள்
இயம்பிடும் சொற்களை இயக்கிடும் நாமகள்
ஊழினைக் கடக்கவே உதவிடும் கோமகள்
உயரிய அருங்கலை உறைந்திடும் மாமகள் !
நோக்கினில் கலைகளின் நுண்பொருள் விளங்கிடும்
நொடியினில் ஞானமும் கல்வியும் துலங்கிடும்
பாக்களில் பூக்களின் நறுமணம் வீசிடும்
பாரினில் கற்களும் வாயினால் பேசிடும் !
உறுதியும் தெளிவுமே சேர்ந்திடல் வேண்டுமே
உள்ளொளி பெருக்கியே அவளருள் தூண்டுமே
சிறிதள வாயினும் அவள்புகழ் பாடுவோம்
செயல்களில் புகழுடன் வெற்றியும் சூடுவோம் !
1 comments:
Very fine with Ethugai and Mhonai.
Karuththu cherivu with Kavithai nayam makes it splendid.Keep on
writing.Best wishes.
RMK
Post a Comment