BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, October 5, 2011

Vetriyum sooduvom -A song on Goddess Saraswathi-By R.Natarajan

                                      வெற்றியும் சூடுவோம் !


ஏழிசை யாழினை ஏந்திய பாமகள் 
     இயம்பிடும் சொற்களை இயக்கிடும் நாமகள் 
ஊழினைக் கடக்கவே உதவிடும் கோமகள் 
      உயரிய அருங்கலை உறைந்திடும் மாமகள் !


நோக்கினில் கலைகளின் நுண்பொருள் விளங்கிடும் 
      நொடியினில் ஞானமும் கல்வியும் துலங்கிடும் 
பாக்களில் பூக்களின் நறுமணம் வீசிடும் 
      பாரினில் கற்களும் வாயினால் பேசிடும் !

உறுதியும் தெளிவுமே சேர்ந்திடல் வேண்டுமே 
      உள்ளொளி பெருக்கியே அவளருள் தூண்டுமே 
சிறிதள வாயினும் அவள்புகழ் பாடுவோம் 
     செயல்களில் புகழுடன் வெற்றியும் சூடுவோம் !


1 comments:

RMK said...

Very fine with Ethugai and Mhonai.
Karuththu cherivu with Kavithai nayam makes it splendid.Keep on
writing.Best wishes.

RMK