BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS
Showing posts with label Tamil Poetry. Show all posts
Showing posts with label Tamil Poetry. Show all posts

Saturday, January 15, 2011

PONGAL VAAZHTHU

                                                      பொங்கல் வாழ்த்து !

தென்றல் உலவட்டும் , அமைதி நிலவட்டும் ---முகத்தில்
                  சிறுநகை மலரட்டும் !

சென்றவை மறக்கட்டும் , வருபவை சிறக்கட்டும் --நல்ல
                 காலம் பிறக்கட்டும் !

தீமை அழியட்டும் , துன்பம் ஒழியட்டும் --வானம்
               சீர்மழை பொழியட்டும் !

உலகோர் உழைக்கட்டும் , எளியோர் பிழைக்கட்டும் --என்றும்
              உண்மை தழைக்கட்டும் !

மகிழ்ச்சி பொங்கட்டும் , வறுமை மங்கட்டும் --எல்லா
              வளமும் தங்கட்டும் !!!

              

Tuesday, August 31, 2010

aagaayak koorai

விருப்பத்தைத்   தெரிவித்தா  பிறந்தேன் ? கூட்டை
             விட்டுயிர்தான்  போம் நாளும்   அறிதல் உண்டா ?
கருப்பையை  விட்டு வெளி   வந்த  நாளாய்க்
             கா டடையும்   நாள்வரையில்   ஏற்றத்  தாழ்வு
திருப்பங்கள்  வந்துபோதல்  இயற்கை  அன்றோ !
            செருக்கடைதல் , துயரடைதல்   இல்லை, இல்லை !
உருப்படியாய்  வாழ்நாளில்  உலகிற் காக
            ஒன்றேனும்  செய்தபின்பே  உயிர்துறப்பேன் !


வேதனைகள்   வாழ்க்கையிலே   வந்த  பின்னர்
           வெம்பிமனம்   புழுங்குவதால்  பயன்தான்   என்ன ?
சோதனைகள்   அடுக்கடுக்காய்  உற்ற  போதும்
           சுமக்கின்ற  வலுவென்றன் தோள்கட்  குண்டு .
சாதனைகள்   புரிந்திடுவோர்  புகழைப்  பாடும்
           சரித்திரத்தில்  நிலையான  இடம்பிடிப்பேன்!
ஈது எனது  கொள்கைஎன   ஆன தாலே
         எதுவரினும்   சந்திப்பேன் , வெற்றி   கொள்வேன் ! 


இப்புவியில் வெற்றிபெற  வேண்டு மென்றே
        என்னுள்ளம்  கருதியபின்  தடைதான்  என்ன ?
ஒப்பில்லா  உள்ளம்தான்  உயர்ந்து  விட்டால்
       உரைக்கின்ற  சொற்களுடன்  செயல்கள்  எல்லாம்
தப்பின்றித்  தவறின்றித்  தளர்வும்  இன்றித்
       தகவுடனே  நொடிப்பொழுதில்  தடை கடக்கும்
அப்பொழுது   நெடுங்கடலும்  குளமாய்  மாறும் !
        ஆகாயம்  என்வீட்டுக்  கூரை  யாகும் !!!