விருப்பத்தைத் தெரிவித்தா பிறந்தேன் ? கூட்டை
விட்டுயிர்தான் போம் நாளும் அறிதல் உண்டா ?
கருப்பையை விட்டு வெளி வந்த நாளாய்க்
கா டடையும் நாள்வரையில் ஏற்றத் தாழ்வு
திருப்பங்கள் வந்துபோதல் இயற்கை அன்றோ !
செருக்கடைதல் , துயரடைதல் இல்லை, இல்லை !
உருப்படியாய் வாழ்நாளில் உலகிற் காக
ஒன்றேனும் செய்தபின்பே உயிர்துறப்பேன் !
வேதனைகள் வாழ்க்கையிலே வந்த பின்னர்
வெம்பிமனம் புழுங்குவதால் பயன்தான் என்ன ?
சோதனைகள் அடுக்கடுக்காய் உற்ற போதும்
சுமக்கின்ற வலுவென்றன் தோள்கட் குண்டு .
சாதனைகள் புரிந்திடுவோர் புகழைப் பாடும்
சரித்திரத்தில் நிலையான இடம்பிடிப்பேன்!
ஈது எனது கொள்கைஎன ஆன தாலே
எதுவரினும் சந்திப்பேன் , வெற்றி கொள்வேன் !
இப்புவியில் வெற்றிபெற வேண்டு மென்றே
என்னுள்ளம் கருதியபின் தடைதான் என்ன ?
ஒப்பில்லா உள்ளம்தான் உயர்ந்து விட்டால்
உரைக்கின்ற சொற்களுடன் செயல்கள் எல்லாம்
தப்பின்றித் தவறின்றித் தளர்வும் இன்றித்
தகவுடனே நொடிப்பொழுதில் தடை கடக்கும்
அப்பொழுது நெடுங்கடலும் குளமாய் மாறும் !
ஆகாயம் என்வீட்டுக் கூரை யாகும் !!!
Tuesday, August 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
anbu nanba un kavithaigalil sirithu padithen athilayae nirkiraen en endral un kavithaigalil appadi oru azhntha porul irrukkirathu. Muzhuvathum padithu pinnar marubadi en siriya karuthukkalai koorugiraen.
V. LOGANATHAN 98407 17857
sathyalogaveda@yahoo.co.in
Post a Comment