BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Monday, June 24, 2013

காளமேகம் கவித்திறன்

                                                       செருப்பும் விளக்குமாறும் 

                        (விகடன் 2005 தீபாவளி மலரில் வெளிவந்த என் கட்டுரை )
\

பொறாமை என்பது புலவர்களின் பூர்விகச் சொத்து என்று சொல்வதுண்டு இதனால் ஒரு நன்மையும் உண்டு .போட்டியில் தான் பல அற்புதமான பாடல்கள் படைக்கப்படுகின்றன

காளமேகப் புலவருக்கும் திருமலைராயனின் அரசவைப் புலவர்களுக்கும் ஏற்பட்ட போட்டியில் , தமிழ் இலக்கியத்துக்குப் பல வேடிக்கையான ,மாறுபட்ட  பாடல்கள் கிடைத்துள்ளன .

அரசவைப் புலவர்கள் வேண்டுமென்றே கொடுத்த விபரீதமான குறிப்புகளுக்குத் தக்கவாறு ,யாவரும் வியக்குமாறு பாடினார் காளமேகம் .

ஒரு புலவர் "செருப்பு " எனத் தொடங்கி , " விளக்குமாறு " என்று முடியும் வகையில் வெண்பா ஒன்றைப் பாடுமாறு சொன்னார் . விடுவாரா காளமேகம் ?
'
"செருப்புக்கு " என்பதை 'செரு + புக்கு '( 'போர்க்களம்  புகுந்து  ') என்றும் ,'விளக்குமாறு ' என்பதை  'விளக்கும் + ஆறு '( 'விளக்கமாகச் சொல்லும் வழி) என்றும் அமைத்து அசத்தி விட்டார் .

" செருப்புக்கு வீரரைச் சென்றுஉழக்கும்  வேலன் 
பொருப்புக்கு நாயகனைப் புல்ல --மருப்புக்கு
தண்தேன்  பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும் 
வண்டே  விளக்கு மாறே !" 

'போரில் எதிரிப்படை  வீரர்களைத் துன்பப்படுத்தும் , மலைக்குத் தலைவனான வேலேந்திய முருகனை நான் அடைய , தாமரையில்  இருக்கும் வண்டே .... நீ  வழி காட்டு ' என்று தலைவியின் கூற்றாக அமைந்த அழகிய பாடல் இது !

1 comments:

GAYATHRI said...

I miss my tamil classes and our discussion!! I used to have such incidents in my prose in tamil lessons!! Ilakkiyam inum makkalai sendru adayavillai!! try ur best to serve the tamils appa :)