BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, June 23, 2013

மூன்றுமுறை" உண்ட"மூதாட்டி!

                                           

                                       மூன்றுமுறை" உண்ட"மூதாட்டி!

                        (விகடன் 2005 தீபாவளி மலரில் வெளிவந்த என் கட்டுரை )

(இலக்கியம் என்பது ,மனித வாழ்வின் மகத்தானதொரு பரிமாணம் ஆகும் .மனிதன் நினைப்பது, பேசுவது ,எழுதுவது --அனைத்துமே இலக்கியத்தை உருவாக்குகின்றன .
அது புலவர்களின் பரம்பரைச் சொத்து என்றும் ,அறிவு ஜீவிகளின் ஆஸ்தி என்றும் ,மேதைகளுக்கு மட்டுமே உரிய மேலான விஷயம் என்றும் தவறாகக் கருதப்பட்டு விட்டது .
இலக்கியத்தின் இயல்பான இனிமையை நீங்கள் ரசிக்க ....ருசிக்க ... இதோ  ஓர்  இலக்கியத் துளி !)  
                                                    ------------------------

ஒரு முறை பாண்டியன் வீட்டுத் திருமண விருந்தில் ஏகப்பட்ட கூட்டம் பந்திக்கு முந்திக் கொண்டு பாய்ந்து சென்றவர்கள் , ஒரு பாட்டியைக் கீழே தள்ளி விட்டனர் .அவர் ---தமிழ்ப் பாட்டி ஔவை.

ஓர் ஓரத்தில் சென்று அமர்ந்தார் ஔவை .அப்போது அந்தப் பக்கம் வந்த பாண்டிய அரசன் ,அவரிடம்  " அம்மையே ,உண்டீர்களா ? விருந்து சுவையாக இருந்ததா ? " என்று அன்புடன் விசாரித்தான் .

எரிச்சலை  அடக்கிக் கொண்ட ஔவை , " உண்டேன் ,உண்டேன், உண்டேன்...  ஆனால் சோறு மட்டும் உண்ணவில்லை .!" என்று அமைதியாக  உரைத்தார் .

விழித்தான் வேந்தன் . விளக்கிச் சொல்லுமாறு  வேண்டினான் .

ஔவையார் சொன்னார் : "கூட்டத்திலே  நெருக்குண்டேன்  ; கீழே தள்ளுண்டேன் ; பசி மிகுதியால் வயிறு சுருக்குண்டேன் ....சோறு  மட்டும் உண்ணவில்லை !"

இந்தப் பொருள் வரும்படி ஔவைப் பாட்டி பாடிய பாட்டு இதோ :

"வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து 
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் -- அண்டி 
நெருக்குண்டேன் ,தள்ளுண்டேன் ,நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் ...சோறுகண்டி லேன் ! "

பாட்டைக் கேட்ட பாண்டியன் ,தன் கையால் அவருக்கு விருந்தளித்துப் பெருமைப் படுத்தினான் .        

5 comments:

Anonymous said...

migavum arumaiyaga irunthathu.

jayanthi velavan said...

migavum arumaiyaga irunthathu.

Unknown said...

romba nalla irukku sir...also informative-Dhanusha

Unknown said...

romba nalla irukku sir...also informative-Dhanusha

GAYATHRI said...

I remember this article appa :) good one