தெய்வ வரமே !
காலையிளம் பனிபோன்ற முத்து--நாங்கள்
களித்திடவே வந்திருக்கும் சொத்து -பசுஞ்
சோலைவளர் பூவெனவே சொற்றமிழின் பாவெனவே
சிரித்தாய் -உள்ளம் -பறித்தாய் !
தரையினிலே தவழ்கின்ற மதியே -எங்கள்
சந்ததிக்கு வாய்த்திட்ட கதியே -தா
மரைபோன்ற கன்னத்தில் மணிமுத்தம் தந்திடவோ
இன்பம் -அதுதான் -என்போம் !
மழலைமொழி பேசுகின்ற கிளியே -எங்கள்
மனம்கவர்ந்த இன்பத்தேன் துளியே -புல்லாங்
குழலையும் யாழையும் குவலயத்தில் வெல்லுமுன்
சொற்கள் -கற்கண்டுக் -கற்கள் !
திறமையுடன் ஒளியதுவும் கூடி -இங்குத்
திகழ்கின்றாய் எம்மிடையே ஆடி -எங்கள்
உறவெனவே உதித்திட்ட ஒப்பில்லா மாணிக்க
நகையே -முல்லை -முகையே !
ஆடும்மயில் பாடும்குயில் என்று -போற்றி
ஆயிரமும் கூறிடுவோம் இன்று -உலகில்
தேடும்சுகம் அத்தனையும் திருமகளே உன்னால்தான்
வருமே -தெய்வ -வரமே !
பிரவீன் -ரோஷ்ணி--இவர்களின் செல்வ மகள் மானஸாவின் முதல் ஆண்டு நிறைவின் போது பாடிய பாடல் (30-01-20110 )
காலையிளம் பனிபோன்ற முத்து--நாங்கள்
களித்திடவே வந்திருக்கும் சொத்து -பசுஞ்
சோலைவளர் பூவெனவே சொற்றமிழின் பாவெனவே
சிரித்தாய் -உள்ளம் -பறித்தாய் !
தரையினிலே தவழ்கின்ற மதியே -எங்கள்
சந்ததிக்கு வாய்த்திட்ட கதியே -தா
மரைபோன்ற கன்னத்தில் மணிமுத்தம் தந்திடவோ
இன்பம் -அதுதான் -என்போம் !
மழலைமொழி பேசுகின்ற கிளியே -எங்கள்
மனம்கவர்ந்த இன்பத்தேன் துளியே -புல்லாங்
குழலையும் யாழையும் குவலயத்தில் வெல்லுமுன்
சொற்கள் -கற்கண்டுக் -கற்கள் !
திறமையுடன் ஒளியதுவும் கூடி -இங்குத்
திகழ்கின்றாய் எம்மிடையே ஆடி -எங்கள்
உறவெனவே உதித்திட்ட ஒப்பில்லா மாணிக்க
நகையே -முல்லை -முகையே !
ஆடும்மயில் பாடும்குயில் என்று -போற்றி
ஆயிரமும் கூறிடுவோம் இன்று -உலகில்
தேடும்சுகம் அத்தனையும் திருமகளே உன்னால்தான்
வருமே -தெய்வ -வரமே !
பிரவீன் -ரோஷ்ணி--இவர்களின் செல்வ மகள் மானஸாவின் முதல் ஆண்டு நிறைவின் போது பாடிய பாடல் (30-01-20110 )